Sunday 27 November 2011

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கான ஆதாரங்கள்: முதன் முதலில் இணையப்பெருங்கடலில்!!!




எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கான ஆதாரங்கள்: முதன் முதலில் இணையப்பெருங்கடலில்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.இதற்காக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் நூற்றில் ஒரு பங்கினை இவருக்கு நாம் வழங்குவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.

பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)

ஓம்சிவசிவஓம்

Wednesday 16 November 2011

A powerful worshipping place


நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி - A powerful worshipping place !

Nov 16, 2011


Read more: http://www.livingextra.com/2011/11/powerful-worshipping-place.html#ixzz1dsijPu3U


உங்களுக்கு கேட்டை நட்சத்திரமா? நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய ஆலயம் இது. ஏன் , எதற்கு என்று போட்டு மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல், உடனடியாக ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் மன சஞ்சலம், நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் அற்புதத்தை உணரப் போகிறீர்கள். 

கேட்டை நட்சத்திரம் மட்டும் அல்ல , ஒவ்வொரு ஆன்மீக தேடல் இருப்பவருக்கும் , பலப் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் இந்த நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் .  

நமது நீண்ட நாள் வாசகர் அபிராம் , மெய் சிலிர்த்து எழுதிய ஒரு கடிதத்தில் - இவரை ஒருதரம் மனத்தால் நினைத்ததற்க்கே தனது ஒரு பெரிய பிரச்சினை சில மணி நேரங்களிலேயே தீர்ந்ததைக் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த கால கட்டத்தில், நம்பக்கூட முடியாத அளவுக்கு சில அற்புதங்களை சர்வ சாதாரணமாக நிகழ்த்திய மகான் இவர். 

மகான்களின் / ஜீவ சமாதிகளின் ஆற்றல் பற்றி சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.   

   
சில மாதங்களுக்கு முன்பு, எனது வட இந்திய நண்பர் ஒருவருடன் - ரமண மகரிஷி சமாதிக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவர், ஏற்கனவே ஸ்ரீ ரவி சங்கரின் வாழும் கலைப் பயிற்சி மாணவர். தியானம் எளிதில் கைகூடும் அளவுக்கு பயிற்சி தினம் மேற்கொள்பவர்.  இருவரும் சற்று நேரம் அங்கு இருந்த தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தோம். ஒரு பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே , அங்கு இருந்த அதிர்வலைகளை அவர் உணர்ந்து கொண்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தது என்று கேட்டேன். " Astonishing.... மே தோ ஹில் கயா" என்று பரவசப் பட்டு அவர் கூறினார். அதன் பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பொதுவாக கிரிவலம் செல்லும்போது , வழியில் எதுவும் பேசிக்கொள்ளாமல் செல்வதுதான் வழக்கம். 

திருவண்ணாமலை அவருக்கு முதல் அனுபவம். தொடர்ந்து கிரிவலம் சென்றோம். ஆதி அருணாசலம் செல்லும் வரை எதுவும்  பேசவில்லை.  அந்த ஆதி அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள அம்மன் சந்நிதியில் விளக்கு ஏற்றிவிட்டு அம்மனை பார்த்தபடி நின்று இருந்தோம்... அதுவரை அமைதியாக இருந்த நண்பர், மெதுவாக பேச்சுக் கொடுத்தார்... குருஜி , நான் இந்த இடங்களுக்கு எல்லாம் பலமுறை வந்து இருக்கிற மாதிரி எனக்கு தோணுது... இந்த கோவிலுக்கும் எனக்கும் எதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி உணர்கிறேன்... இதுக்கு முன்னேயும், நீங்க தான் எனக்கு எதோ புதுசா சில விஷயங்கள் கத்துக் கொடுத்து இருக்கிறீங்க... உள்ளே இருக்கும் சிவனுக்கு , இந்த கோவில் கட்டும்போது எல்லாம் நான் நிறைய வேலை செய்து இருக்கிறேன்... நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து நிறைய பூஜை செய்து இருக்கிறோம்... 
புன்முறுவலுடன் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் ... " ஷஷாங்க், திருவண்ணாமலை ஒரு பேரதிசயம்.... இன்னும் போகப் போக நிறைய புதிர்கள் விடுபடும். சலோ, மேலே தொடர்வோம்" என்று கிரிவலத்தை தொடர்ந்தோம்... 
அவர் இப்படிக் கூறியதில் எனக்கு ஒன்றும் வியப்பு ஏற்படவில்லை.... ஒரு உளறலாக தெரியவில்லை.... ஏன் என்றால், பல வருடங்களுக்கு முன்பு, முதன் முறையாக இந்த ஆதி அருணாச்சலத்தை தரிசிக்கும்போது , நானும் இதை ஒட்டிய உணர்வுகளை அடைந்தேன்..

இந்த சம்பவத்துக்கு அடிப்படையாக இருந்தது, மனத்தை ஒரு லயத்தில் கொண்டு வந்தது - ரமண மகரிஷி சமாதிக்கு முன்பு நடந்த அந்த தியானம்.
ஒவ்வொரு ஜீவ சமாதியும், அந்த மகான்களின் பேரருள் வீச்சை தன்னகத்தே  உள்ளடக்கியே இருக்கிறது. உங்கள் மன அதிர்வை நீங்கள் கவனிக்க முடிந்தாலே, இதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். அந்த வகையில், இந்த நெரூர் மகான் ஜீவ சமாதி நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம்... நம் வாசகர்களுக்காக இதோ :

மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார்.  அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை!  ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது.

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!  சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம். 

சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல  நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். 

இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!


Read more: http://www.livingextra.com/2011/11/powerful-worshipping-place.html#ixzz1dsiSYBPO

Thursday 27 October 2011

Lesson on this B'day


So Many years passed from birth.

Year on year, either becoming young or old, you bound to have expectations from other stakeholders in your life. Atleast the basic expectation, to wish us on our b'day.

Incidently, this year, it got gelled-up with Deepavalli(Diwali). Most of my major life stakeholers(Family Member, Friends, Relatives), have overlooked this day and surprisingly missed me wishing on the occassion. I just felt left-out.

But as soons as, I opend Facebook(FB), I am very glad to see so many of you, able to wish me on the day. I would like to place my sincere thanks to FB, for this moment. And also, all the people who could think about me and wished me, through FB...made me feel very honoured.

Few things learnt from this b'day...

(a) However / Whatever / Whomsoever / Wherever / Whenever you deliver for the benefit of others, does not assure or stand responsibility to provide similar returns on your needs from the same individuals. So, either minimise your expectation or keep it as NONE.

(b) Always find ways and means to wish people on their days, no matter of their designation, position, social contacts, political influence, financial position....we may not know, some of our wishes may soothe somebody's silently crying heart.

(c) Its always easy to provide guidance for other's silly feelings & emotions...but not able to accept the same, when it falls on you.

Anyhow...life should go on...

Wednesday 12 October 2011

நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !


நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !

Oct 11, 2011

வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம்..! என்னடா, இந்த மாசம் தொடங்கி பத்து நாள் ஆச்சே, இன்னும் ஒரு கலக்கல் கட்டுரை கூட வரலையேன்னு நெனைச்சுக்கிட்டு  இருந்து இருப்பீங்க..... ( என்னது , இல்லையா? அட , எப்போவாவது மறந்து ..... இல்லையா? சரி , விடுங்க)   அதனாலே என்ன , படிச்சதுக்கு அப்புறம், நீங்க ஒரு பத்து நிமிஷமாவது யோசிப்பீங்க , கண்டிப்பா... ! இந்த கட்டுரை, நீங்க எப்போ படிச்சாலும், உங்களுக்கு , உற்சாகம் அளிக்ககூடிய, ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கட்டுரையா இருக்கும்... அதுக்கு நான் உத்திரவாதம்..!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQdh2aoPmRkRRBTFqr_LmmsX_yNHl5_XO-Vq_GE-riCUinU9LGE

இங்கே நான் சொல்லப்போற , ஏற்கனவே நான் எழுதி இருக்கிற பல விஷயங்கள் - எத்தனையோ புத்தகங்கள்ளே படிச்சதா இருக்கலாம் . பெரிய பெரிய ஞானிகளின் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் கிடைத்த பொக்கிஷங்களா இருக்கலாம். என்னுடைய அனுபவத்தில், நான் பட்டு, உணர்ந்து கிடைச்ச தகவல்களா இருக்கலாம். இல்லை, உங்களைப் போல நண்பர்கள் , அனுப்பி வைத்த சிறந்த கருத்துக்களா இருக்கலாம்.  நான் உங்க கிட்டே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே.. நம்ம கட்டுரைகளை எல்லாம் படிச்சுட்டு , நான்  ஏதோ பெரிய பிஸ்தான்னு நினைச்சுக்கப் போறீங்க... ! நானும் உங்களை மாதிரி ஒரு சாதாரண ஆளுதான்.. ஏன், உங்களை விட கம்மியா விஷயம் தெரிஞ்சவன் தான். ... ஆனா, உங்களை மாதிரியே, ரொம்ப ஆர்வமா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கிட்டு இருக்கிற, அந்த இறை சக்தியை உணரனும்னு துடிக்கிற , இன்னும் கொஞ்சம் நல்லவனா ஆகணும்னு நினைக்கிற , மனிதம் வளர்க்கணும்னு நெனைக்கிற ஒரு சாதாரண ஆளு.... ஏதாவது தவறுதலா கருத்துக்கள் இருந்தா தயவு செய்து சுட்டிக் காட்டுங்க, திருத்திக் கொள்கிறேன்.! இந்த இரண்டாம் ஆண்டு பயணம் , ஒரு சுவாரஸ்யமான , பயணமாக இருக்க  , அந்த இறை என்னுடன் தொடர்ந்து இருக்க பேராசைப் படுகிறேன்!

சரி, மேட்டருக்குப்  போகலாம்!

ஆலயம் என்றால் என்ன? ஏன் நாம அங்கே போகணும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? கடவுள் நிஜமாவே இருக்கிறாரா/ அப்படி இருந்தா, அவர் எங்கும் இருப்பவர்னா, அப்புறம் ஏன் கோவில்ல மட்டும் நாம போய் கும்பிடனும் ?  மத்த இடங்கள்...? இப்படி உங்களைப் போலவே பல கேள்விகள் எனக்கும் உண்டு.... பொறுமையா, ஒவ்வொரு விஷயமா பார்ப்போம்...!

இந்த கம்ப்யூட்டர் இருக்கு. அப்படினா இதை ஒருத்தர் உருவாக்கி இருக்கணும். இந்த மேஜை, நாற்காலி இருக்கு. இதை ஒரு தச்சர்தான் உருவாக்கி இருக்கணும். ஒரு பொருள் இருந்தா , அதுக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. அதே மாதிரி, இந்த பூமி, வானம், சூரியன், நட்சத்திரம், அண்டம், பேரண்டம் எல்லாம் இருந்தா , அதுக்கும் ஒரு காரண கர்த்தா இருக்கணும், இருந்தே ஆகணும்....


அப்படி உங்களையும் , என்னையும் இந்த உலகத்தையும் உருவாக்கிய பரம்பொருள் தான் , கடவுள்...! (அப்படின்னு நான் சொல்றேன். நீங்க உங்களுக்கு தோணுன பிறகு சொல்லுங்க போதும் . நாம எல்லாரும் கடவுளின் குழந்தைகள். இறை நம் அனைவரின் உள்ளும் நிறைஞ்சு இருக்கு. ஆபடிப்பட்ட நாமே , மனசு அறிஞ்சு ஏதாவது தப்பு செய்யலாமா? )


அப்போ அவர் எவ்வளவு  பெரிய மகா சக்தி...!  எப்படி இருந்தா, அவர் இத்தனையையும் கட்டிக் காக்க முடியும்..! நாம என்னடான்னாக்க , நம்ம வீட்டை , ஆபீஸை  கட்டுக் கோப்பா வைக்கிறதுக்குள்ளவே , முழி பிதுங்குறோம்...!  

கடவுள் - இந்த உலகத்தை எப்படி சமாளிக்கிறார்னு பாருங்க... !


ஒவ்வொரு ஜீவ ராசிக்கும், அது ஜனிக்கிறப்போவே ஒரு சார்ட் , அதுதாங்க, ஜாதகம்...உண்டு. மனுஷனா இருக்கிறதால, நமக்கு சிந்திக்கிற அறிவு இருக்கிறதால  , ( நமக்கு எல்லாம் ஆறறிவாம்ல) , நம்ம முன்னோர்கள் இதுல எதோ விஷயம் இருக்குதுன்னு , கண்டு பிடிச்சு சொல்லி இருக்கிறாங்க... நாம தான் அதை பெரிசா எடுத்துக்கலை... 

ஒவ்வொரு மனுஷனோட உடம்புலயும், ஒன்பது சக்கரம் சுழலுதாம். நாம பிறக்கும்போது, இந்த ஒன்பது கிரகங்கள் எங்கே , எங்கே இருக்குதோ, அதுக்கு ஏத்த படி இந்த சக்கரங்கள் நம்மை சுழட்டுவித்து - நீ இப்போ இதை செய், இதை செய்யாதேன்னு கொஞ்சம் , கொஞ்சமா ஆட்டுவிக்குது,,, நம் எண்ணங்கள் உள்பட... இதற்க்கு பஞ்ச பூதங்களால் ஆன நம் உடம்பு , இயற்கைக்கு கட்டுப் படுது.  சனி , செவ்வாய் , குரு இந்த மாதிரி கிரகங்கள் உண்டு தானே... கிரகணம் உட்பட...! 

நீங்கள் இயற்கையிலிருந்து  , பஞ்ச பூதங்களில் இருந்து எதை எடுத்தாலும், இந்த நவ கோள்களின் பிடியில் வந்து விடுகிறீர்கள்.

பெரிய , பெரிய முனிவர்கள், ரிஷிகள் - உன்னை உணர் , உன்னை உணர்னு சொல்றது இதைத்தான்... இந்த சக்கரத்தை நாம உணர்ந்து - உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் அந்த சக்தியை , உபயோகப் படுத்துனு சொல்றாங்க... யோக, பிராணயாம பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறதும் இதைத்தான்.. !
இயற்கை , நவ கிரகங்கள் எல்லாம் வெளிப்படுத்துற சக்தியை , இந்த சக்கரங்கள் வாங்கி, நம்மளை செயல் பட வைக்குது... இது நல்ல வகையில் செயல் நடத்த , நமது பூர்வ ஜென்ம வினைகளைப் பொறுத்து அது அமைகிறது...! 

ஜாதகம், வாஸ்து , அதிர்ஷ்ட்டக் கற்கள் எல்லாம் ஒரு பாதினு வைச்சாக் கூட, மீதி பாதி , உங்க கையில தான் இருக்குது..! போன ஜென்மத்து வினைகள் , கடுமையா இருந்தாக் கூட , தெளிவான மன திடத்துடன், சிந்தனையுடன், உங்கள் உடல்  நலம் பற்றிய அக்கறையுடன் , திட்டமிட்டு , முடிவு எடுத்தாலும், நீங்கள் வெற்றி பெற முடியும்.. ! என்ன , கடினமாக போராட வேண்டி வரும்..!


இதையே , போன ஜென்மத்து புண்ணியம் நிறைய வைத்து இருப்பவர்கள், உங்களில் கால்வாசி முயற்சி செய்தாலே , உங்களை தாண்டிப் போக முடியும்... ! அப்போ, நம்ம முயற்சிக்கு என்ன பலன்னு கேட்காதீங்க...! நடந்து  முடிந்த விஷயங்களைப் பற்றி , யோசித்து என்ன பண்ண முடியும்? இனிமேலாவது , நல்ல காரியங்களை செய்து , புண்ணியக் கணக்குல கொஞ்சம் வரவு  வைப்போம்... !  பாவக் கணக்கை இது தாண்டி வந்திடுச்சுனா, எப்போ வேணும்னானாலும், அது உங்களுக்கு பயன் தருமே ! 

அதனாலே , ஜாதகத்தைப் பார்த்துட்டு - எந்த ஜோதிடரும் , ஒன்னும் சரியா இல்லையேப்பா ன்னு சொன்னாக் கூட , மனம் தளர்ந்து போகாம , தைரியமா , முயற்சி செய்யுங்கள்.. இன்னும் ஒரு பாதி இருக்கு....


நடந்தவை போகட்டும். இனிமேல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களும், புண்ணிய செயல்களும், தர்ம காரியங்களும் - உங்களுக்கு அடுத்த ஜென்மம் வரை கூட , துணை வரும். உங்கள் சந்ததியையும் காக்கும்.


இது எல்லா விஷயமும் , நம்ம முன்னோர்களுக்கும் தெரியும்.ஆனால், ஏதோ காரணங்களுக்காக , பல புராணக் கதைகளோட அதை மிக்ஸ் பண்ணி, மிகை படுத்தி , ஒரு கேலிக் கூத்தா, நம்பவே கொஞ்சம் கடினமா ஆக்கிட்டாங்க..!


கோவில்கள் எதற்கு தேவை?
சுதி, லயம் எல்லாம் சேர்ந்தாதான் , பாட்டு. அது மாதிரி,ஆண்டவனை , ஆள்பவனை , ஆளப் போகிறவனை சரியான விகிதத்தில் வைத்து இருக்கும் இடம் தான் ஆலயம். இப்படிப் பட்ட ஒரு ஆலயத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போதே , உங்கள் உடம்பில் சுணங்கிக் கொண்டு இருக்கும் சக்கரம் சீராக சுழல ஆரம்பிக்கும். உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் . நீங்களும் சுய, புத்தியுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள்.   


இப்படி , மிக சரியான விகிதத்தில் அமைந்து இருக்கும் ஆலயங்கள் இந்தியாவில் , ஏராளம். இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்து இருப்பதைவிட, நம் எதிரி நாடுகள் தெளிவாகப் புரிந்து , பொறாமையில் புழுங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக , நம் தென் இந்தியாவில் இப்படிப் பட்ட ஆலயங்கள்  அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து இயற்கை நிலங்களும் இங்கு அதிகம். பாலை நிலமா ? கடற்கரை கூட பாலை தான்.


இப்படிப்பட்ட மகத்தான ஒரு பூமியில் தான் நாம் பிறந்து இருக்கிறோம். இல்லை , போன ஜென்மத்தில் பிறந்து இருப்போம்... இல்லைனா, நீங்கள் இப்போது எப்படி தமிழில் பேச, படிக்க முடியும்?


அந்த பரம்பொருளின் மகத்தான ஆசி பெற, ஐதீக முறைப்படி அமைந்த ஆலயங்கள்  இங்கு இருப்பதைப் போல , உலகில் வேறு எங்கும் கிடையாது. இன்றைக்கும், அயல் நாடுகளில் வசிக்கும் அன்பர்கள் நம் தமிழ் நாடு வந்தால்,  அது ஒரு கோவிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளடக்கியே இருக்கும்.


நம் ஊரில் இருக்கும் நண்பர்களுக்குத்தான் இந்த ஆலயங்களின் மகிமை புரிவதே இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், பிற மதத்தவர்கள் வாரம் தவறாமல் , அவரவர் கடவுளை வணங்கினாலும் , நமக்கு பிரதோஷம், பௌர்ணமி கூட ஒரு பெரிய விஷயம் இல்லை.


இந்த மாதிரி விசேஷமான நேரங்களில், விசேஷமான ஆலயங்களில் நாம் இருந்தாலே போதும், நமக்கு நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். 


நம் மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?

ஒரு வீடு என்று இருந்தால் , எப்படி ஹால் , பூஜையறை, சமையலறை , தூங்கும் அறை என்று இருக்கிறதோ, அதன் மூலம் குறிப்பிட்ட பலன்கள் நாம் அனுபவிக்கிறோமோ, அதைப் போல - ஒவ்வொரு தெய்வத்திற்கும் , சில குறிப்பிட்ட வரங்களை அளிக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் தான் , பலப் பல ஆலயங்கள் , பலப்பல தெய்வங்கள் நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு இருக்குமோ என்கிற எண்ணம் தலை  தூக்குகிறது. 


சரி, மனிதனாகப்  பிறந்தவர்களுக்கு எந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது என்று பார்த்தோமேயானால் - மகத்தான ரிஷிகள் அனைவரும் அறிவுறுத்துவது - கால பைரவரையே.  இவர் தான் சனி பகவானின் குருவாக கருதப்படுபவர். கர்ம வினைகளை அறுப்பவர் இவரே. நாம் எத்தகைய கொடிய பாவங்களை முன் ஜென்மங்களில் செய்து இருந்தாலும், அவற்றின் தாக்கத்தை குறைத்து , நமக்கு கிடைக்கவேண்டிய பலன்களை அள்ளிக் கொடுப்பவர். சிவ சொரூபங்களில், விரைவில் பலன்களை  தருபவர் பைரவர்தான். 


பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி தினம் , மிக உகந்தது. வீட்டில் வைத்து பைரவரை வணங்க இயலாது. பைரவ மூர்த்தத்தில் - சொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டும் வீட்டில் வைத்து வணங்கலாம். இவரது படம் வீட்டில் இருந்தாலே போதும். உங்களுக்கு பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். முறைப்படி , வழிபடத் தொடங்கி , நம்பிக்கையுடன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடித் தரும்.


விதிப்படி நடப்பதை நாம் தடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு இழப்பு, பிரிவு , துக்கம் ஏற்பட வேண்டுமெனில் , அது நடந்தே தீரும். அப்ப, இறைவனை வழிபடுவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இழப்பதை தடுக்க முடியாது தான், அது பூர்வ ஜென்ம வினை. ஆனால், இந்த தெய்வ வழிபாடு உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை விரைவில் கொடுக்கும். உதாரணத்திற்கு , உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பு இருக்கும் என்றால், ஏதோ ஒரு வகையில் , உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரவு வர வைக்கும். இப்போது, உங்களால் இழப்பை ஈடு செய்ய முடியும் அல்லவா? 


ஒரு பெண்ணை மனதார விரும்புகிறீர்கள் , என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் , அவரை மணம் முடிக்க இயலவில்லை. காதல் தோல்வியில் முடிகிறது. அது உங்கள் வினைப் பயன். மனம் தளராது , நீங்கள் இறைவனைப் பற்றி நிற்கும் பொழுது, அவர் உங்களுக்கு அந்த பெண்ணை விட , அற்புதமான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார். உங்கள் மனம் மகிழ்ந்து , ஏற்கனவே இருந்த வலி , துயரம் மறைந்துவிடும். 


அதை விட்டு , துயரம் வலி வந்தால்  - மதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு விட வேண்டாம். வாழ்க்கையில் வேதனைப்படும் சம்பவங்கள் எது நிகழ்ந்தாலும், உங்கள் பூர்வ ஜென்மை வினை குறைகிறது என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு , இறைவனை இன்னும் தீவிரமாக பற்றிக் கொள்ளுங்கள். 


இடுக்கண் வருங்கால் நகும் அளவுக்கு, நாம் இன்னும் போகவில்லை. வலி , வேதனை இருந்தாலும், தினமும் இறைவனை நினைத்து அவன் பொறுப்பில், விட்டுவிடுங்கள். முடிந்தால் தினமும் அவனைப் பார்த்து வாருங்கள். இல்லையா, வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக செல்லுங்கள். அழுகிற  புள்ளைக்கு தான் பால் கிடைக்கும். மனதில் , ஆழத்தில் உங்கள் அழுகை தீராமல் இருக்க வேண்டும். கடவுளை பார்க்கும்போதே , கண்ணிலேயே உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்.   உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,அந்த இறைவனுக்கே மனது பதற வேண்டும். என்னடா, நாள் தவறாமல் நம்மளை நம்பி , இங்கே வர்றானே , இவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க வைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை - அவனே சீக்கிரம் அனுப்ப வேண்டும். கண்டிப்பாக அனுப்புவான், நிச்சயமா அது நடக்கும்...


அதல பாதாளத்தில் விழுந்து விட்டோமே என்று கலங்கி நிற்க வேண்டாம். தோல்விகள் மாதிரி ஒரு நல்ல படிப்பினையை உங்களுக்கு யாரும் கற்றுத் தர முடியாது. சிகரம் நீங்கள் தொடுவது உறுதி..!


தோல்விகளில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் நீங்கள் சீக்கிரம் முன்னுக்கு வர, சில எளிய யோசனைகளை இப்போது கூறுகிறேன்...


மது , மாமிசம் இனிமேல் மறந்தும் தொட வேண்டாம். எல்லா ஜீவ ராசிகளுக்கும் வினைப் பயன் உண்டு. ஆடு, கோழிகளை நாம் உண்ணும்போது, அவற்றின் பாவத்தையும் நாம் சேர்ந்து சுமக்கப் போகிறோம். நம் பாவத்தை கரைக்கவே இன்னும் எவ்வளவு கஷ்டங்களோ..? அக்பர் சொன்னது போல, நம் வயிறு பிணங்களைப் புதைக்கும் சுடுகாடாக இருக்க வேண்டாம்.


வாரம் ஒரு முறையாவது , உங்கள் மனதுக்கு நிம்மதி  அளிக்கும் ஒரு கோவிலுக்கு சென்று, ஒரு மணி நேராமாவது அங்கே, மனமுருக இறைவனை வேண்டுங்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு ஸ்தல விருட்சம் உள்ளது. அந்த விருட்சம், இறைவன் அமர்ந்து இருக்கும், கர்ப்ப கிருகத்திற்கு சமம்.  உங்கள் தீய வினைகளை ஈர்த்து , உங்கள் வினைச் சுமையை குறைக்கும். எல்லாராலும், கர்ப்ப கிருகத்தினுள்ளே செல்ல முடியாது. ஆனால், ஸ்தல விருட்சத்தின்  அடியில் அமரலாம். அங்கு அமர்ந்து, நீங்கள் ஜெபிக்கும் மந்திர ஜெபம் , அளவில்லாத ஆற்றலுடன், உங்களை கவசம் போல் பாதுகாக்கும். ஆலயங்கள் ஆற்றலுடன் திகழ , கோபுர கலசமும், ஸ்தல விருட்சமும் தான் மிகப் பெரிய காரணிகள். 


ஜாதி மத இன வேறு பாடின்றி , இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் . ஓம். பிரணவ மந்திரம். சிவ சிவ என்று ஜெபிக்கும்போது உங்களுக்கு கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும். ஆனால், சிவ சிவ மந்திரம் உங்களுக்கு பற்று, பாசத்தை  அழித்து துறவறத்தை நோக்கி இட்டுச் செல்லும். குடும்பஸ்தர்களுக்காகிய நமக்கு இந்த மந்திரம் சரிப் படாது. மகான் மிஸ்டிக் செல்வம் ஐயா, அவர்கள்  தன ஒட்டுமொத்த வாழ்வையே ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு , கண்டறிந்த மகத்தான மந்திரம் " ஓம் சிவ சிவ ஓம் " , சிவ சிவ மந்திரத்துக்கு முன்னும் , பின்னும் ஓம் சேரும்போது , அதன் சக்தி அளவிட முடியாத அளவுக்கு பன்மடங்கு ஓங்கி விடுகிறது. பல உயரிய வேத மந்திரங்களுக்கு இணையானது இந்த மந்திரம். வேதங்களை கற்று உணர, நமக்கு பாக்கியம் உண்டோ , இல்லையோ தெரியாது. ஆனால் , உரிய நேரத்தில் இந்த மந்திரம் கிடைத்த வகையில் , நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே. 


தினமும் , குறைந்தது பத்து நிமிடம் காலையிலும், இரவிலும் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அவனுள் தொடங்கி, அவனுள் முடிவதே உலகம். ஒரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும்போதும் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, நேரத்தை நீங்கள் பின்னர் அதிகரித்துக் கொள்ளலாம். எந்த மந்திரமும், ஒரு லட்சம் முறை ஜெபித்த பிறகே, தன் சக்தியைக் காட்டத் தொடங்கும். 


அதன் பிறகு பாருங்கள், உங்களுக்கு நடக்கும் அற்புதத்தை..!  உங்கள் வாழ்க்கையே , ஜெபிக்கும் முன், ஜெபித்த பின் என்று பிரித்து உணர முடியும்... வஞ்சனை இல்லாது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் , இந்த மந்திரத்தை கற்றுக் கொடுங்கள். ஜெபம் பண்ணும்போது, மஞ்சள் துண்டு, வேஷ்டி , கையில் ருத்திராட்சம் இருந்தால் மிக நல்லது, ஜெபித்த பிறகு - தண்ணீர் அல்லது இளநீர் , அவசியம் அருந்துங்கள். அது, உங்கள் மந்திர சக்தியை உங்கள் உடம்பிலே தங்க வைக்கும். எது இருந்தாலும், இல்லை என்றாலும், இந்த மந்திர ஜெபத்தை ஜெபிக்கலாம். பயண நேரங்களில் கண்டிப்பாக தவிர்க்கவும். நடந்து செல்லும்போதும் ஜெபிக்க வேண்டாம்..! 


அண்ணாமலை , சபரிமலை , மேலும் புனித பாத யாத்திரைகளில் ஜெபிக்கலாம். 


மாதம் ஒரு முறை - சதுரகிரி, அண்ணாமலை , உங்கள் குல தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை பத்திரகாளி, முருகனின் அறுபடை வீடுகள், சமயபுரம், மதுரை, கொல்லிமலை , திருவாற்றியூர் , மயிலாப்பூர் , திருப்பதி, ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம் போன்ற மேலும் இறை இன்றும் நடமாடும் பல பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் , ஏதாவது ஒன்றிற்கு , அவசியம் சென்று வாருங்கள். தமிழ் நாட்டில் சக்தி வாய்ந்த ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. 


தவறாமல் , ஆலய தரிசனத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த கால பழைய ஆலயங்கள் எல்லாம் , இன்றளவும் பல சித்தர்களின் நடமாட்டம் சூட்சுமமாக உள்ள இடங்கள். அவர்களின் ஒரே ஒரு பார்வை கூட, நம் பாவத்தை ஒரு நொடியில் போக்கிவிடும். போலி, பாசாங்கு இல்லாத , பகட்டு இல்லாத - உங்கள் நாம ஜெபம், பல மகா புருஷர்களின் தரிசனத்தை உங்களுக்கு நிகழ்த்தும். 
  
எந்த ஆலயம் சென்றாலும், அவசியம் இந்த மந்திர ஜெபத்தை செய்து வாருங்கள். ஸ்தல விருட்சத்தின் அடியில் , நீங்கள் ஜெபம் செய்யும்போது , பரவச உணர்வு உங்களுக்கு நிச்சயம் உண்டாகும். 


இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து - பிரம்ம முகூர்த்த வேளையில், இறைவனை தொழும் பழக்கத்தை , இயற்கையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். இது, எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. நீங்கள் உங்களுக்கு கொடுத்துக் கொள்ளும், மிக சிறந்த பரிசு , இதுதான். கொஞ்சம் யோகா, கொஞ்சம் மூச்சுப் பயிற்சி , கொஞ்சம் தியானம், மந்திர ஜெபம். உங்கள் உடலும் , மந்திர உடலாகிவிடும். பஞ்ச பூதங்களையும், நவ கிரகங்களையும் நீங்கள் வசியம் செய்து விடலாம்..!



தினமும் ஒரு கைப்பிடி அரிசி  , இறைவனுக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அதை சதுரகிரி போன்ற ஸ்தலங்களில் , அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களில் அன்னதான திட்டத்திற்கு சேர்த்து விடுங்கள்.. தினமும், வேறு ஒரு ஜீவ ராசிக்கு , சிறிதளவாவது உணவு இடுங்கள். ( காகம், நாய், பசு, உடல் ஊனமுற்ற, ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ) . இது உங்கள் தலைமுறைக்கே நீங்கள் சேர்த்து வைக்கப் போகும் புண்ணியம்..! 




இந்த ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை - நம் வாசகர்கள் அனைவரும் , குறைந்தது பன்னிரண்டு புதியவர்களுக்கு , அறிமுகப் படுத்துங்கள்... இது மகத்தான, புண்ணிய காரியம். ஓம் சிவ சிவ ஓம் மந்திர அறிமுகத்தை , நோட்டீஸ் போல அச்சடித்து , ஆலயங்களில் வரும் பக்தர்களுக்கு, கொடுக்கலாம். 

எந்த ஒரு கலையையும், நீங்கள் கற்றுக் கொண்டு இருந்தால் , அதை தகுதி உள்ள பன்னிரண்டு பேருக்கு , நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது , அந்த கலையில் நீங்கள் சகலகலா வல்லவராவது நிச்சயம் , என்பது விதி.....!




எங்கெங்கும் ஓம் சிவ சிவ ஓம் , அருள் அலை பரவட்டும்..! வைணவ சம்பிரதாயம் மேற்கொள்ளும் அன்பர்கள் ஓம் ஹரி ஹரி ஓம் என்றும் ஜெபிக்கலாம்..! பிறவிப் பயனை அடையுங்கள்.. ! நமக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் , கிடைக்கும் நேரத்தில் கிடைத்தால் போதாது... விரைவில் கிடைக்க வேண்டும்..!


இந்த கட்டுரை, இணைய உலகில் - தமிழ் கூறும் ஒவ்வொரு ஆன்மீக அன்பருக்கும் சென்றடைய உதவுங்கள். நீங்கள் வலைப்பூ வைத்து இருந்தால், இந்த கட்டுரையை பதிவிடுங்கள். அல்லது லிங்க் கொடுங்கள். நமது கட்டுரைகளை, தங்கள் வலைப் பூவில் - காப்பி , பேஸ்ட் செய்து கொள்ளலாமா என்று , நிறைய பேர் அனுமதி கேட்கிறார்கள். தயக்கமே வேண்டாம்..! யான் பெற்ற இன்பம் , பெருக இவ்வையகம்..! பூட்டி பூட்டி வைச்சு , நான் போகும்போது  கொண்டு போகப் போறது எதுவுமே இல்லை.   விருப்பம் இருந்தா நன்றி போட்டு  , லிங்க் கொடுங்க.... இல்லையா , நீங்களே போட்டது போல கூட போட்டுக்கோங்க.. நல்ல கருத்துக்கள் , நாலு பேரை சென்றடைந்தால் போதும்..! அதை நீங்கள் செய்தால் என்ன, நான் செய்தால் என்ன? 


உலகம் எவ்வளவு சீக்கிரமா , கேவலமா சீரழிஞ்சுக்கிட்டு இருக்குங்கிறது நான் சொல்லி , தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை. நாம மட்டும் நல்லா இருந்தா போதாது, சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருந்தா, நாமும் நல்லா இருப்போம்..!  ஒரு ரவுடி கிட்ட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும், ஒரு முனிவர் கூட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும்   - கிடைக்கும் பலன்கள் எப்படி இருக்கும்னு , நமக்குத் தெரியாதா என்ன? இப்ப நாம எப்படிப் பட்ட ஒரு கூட்டத்தில் இருக்கிறோம் என்று ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள். 

நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் - இந்த அருள் அலை பரவ , உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ..! 


நாம் இந்த வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால், தனி மனித ஒழுக்கம் , முழு நம்பிக்கையுடன் கூடிய இறை அர்ப்பணிப்பு, தெளிவான இலக்கு , அப்பழுக்கில்லாத திட்டமிடல் , சீரிய முயற்சி இருந்தாக வேண்டும். மெல்ல மெல்ல உறுதியான முன்னேற்றம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்..!


நாம் எந்த மதத்தில், எந்த குலத்தில் பிறந்தோம் என்பது முக்கியமில்லை..! 




போகிற போக்கில் ஒரே ஒரு விஷயம் மட்டும். ஒவ்வொரு முறையும் அண்ணாமலை சென்று , அருணாச்சலேஸ்வரரை தரிசித்து ராஜ கோபுரம் வழியாக வெளியே வரும்போது, இடப் பக்கத்தில் நம் கண்களில் " இளைய ராஜா , ஜீவா அம்மையாரின்" பெயர்கள் தென்படும்.  

ராஜ கோபுரம் - புனருத்தாரணம் செய்ய , நிதி உதவி செய்தவர், இசை ஞானி - நடமாடும் சரஸ்வதி - இளைய ராஜா அவர்கள். மனிதன் பிறந்தது , ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் தான். ஆனால், மனிதனாகப் பிறந்ததற்கு , இதைவிட வேறு என்ன ஒரு சாதனை செய்ய வேண்டும்? 


அவரது சோதனைகள் கடந்த , இந்த சாதனைக்கு - மேலே போல்ட் லெட்டரில் கொடுத்து இருக்கிறேனே , அந்த குணங்கள் தான் காரணம்..!


நம் ஒவ்வொருவரும், இப்படிப் பட்ட பெருமைப் படத் தக்க காரியங்கள் செய்யும் அளவுக்கு, நம் மனசாட்சியே நம்மைப் பார்த்து பெருமைப் படும் அளவுக்கு ,  ஒரு நல்ல நிலை அடைய , அந்த இறைவனின் கருணை நிழல்  , நம் மீதும் விழட்டும்..! சத்தியமும், தர்மமும் நிலைக்கட்டும் !


இதற்க்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி தான்... ஓம் சிவ சிவ ஓம் ..! அதன் பின், அந்த இறை உங்களை வழி நடத்தும். இந்த மந்திர ஜெபமே, உங்கள் உடம்பில் உள்ள நாடி நரம்புகளில் ஊடுருவி , நவ சக்கரங்களையும் சுழலச் செய்யும். பல புண்ணிய யாத்திரைகள் செய்த பலன்களை , உங்கள் வீட்டில் இருந்தே கிடைக்கச் செய்யும்.  


இதை உணர்வுப் பூர்வமாக அனுபவித்து , உணர்ந்து உங்களுக்கு இதை தெரிவிக்கிறேன்..! இந்த அரிய, பொக்கிஷத்தை , நம் உலக நன்மைக்காக அருளிய ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!


எந்த மந்திர ஜெபமும் , அமாவாசை தினத்தில் ஜெபிக்க ஆரம்பிப்பது நல்லது. ஆனால் , நல்ல காரியம் தொடங்க , இன்னும் பதினைந்து நாட்கள் பொறுக்க முடியாது.. இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்..! இன்று ஒரு அபூர்வ சக்தி நிறைந்த தினம். புரட்டாசி மாத பௌர்ணமி. தந்தையும் , மகனுமான - மாபெரும் கிரகங்களான சூரியனும் , சனியும் இணைந்து , சந்திரனை பார்வை இட விருக்கிறது.. !

தந்தை , மகன் உறவு சுமூகமாக இல்லாதவர்கள் , குடும்ப ஒற்றுமை மேலோங்க இந்த நாளின் பௌர்ணமி வழிபாட்டை பயன் படுத்திக் கொள்ளவும்.  விதி வசத்தால் தந்தையை இழந்து - தவிப்பவர்கள், புத்திர சோகத்தால் தவிப்பவர்கள், கர்ம வினைகளால் - தந்தையும், பிள்ளையும் இருந்தும் அநாதை போல தவிப்பவர்கள் , குழந்தை பேறுக்காக காத்து இருப்பவர்கள், குழந்தை வரம் வேண்டி நீண்ட நாள் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் , அரசு வேலைக்காக போராடிக்கொண்டு இருப்பவர்கள்,  ஏழரை , அஷ்டம சனியால் , புதை குழியில் விழுந்து தத்தளிப்பது போல தவிப்பவர்கள், மேலும் வாழ்க்கையில் முன்னேற துடிக்க தவிப்புடன் போராடும் அத்துணை பெரும் - இன்றைய பௌர்ணமி தின வழிபாட்டை , நம்பிக்கையுடன் செய்யுங்கள்..!  மனம் உருக , ஓம் சிவ சிவ ஓம் ஜெபியுங்கள்..! 

அந்த சிவம் உங்களை கவனித்துக் கொள்ளும்..! மீண்டும் இப்படிப் பட்ட நாள் வர இன்னும் பதின் மூன்று மாதங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டும்..!



நம் முன்னோர்களின் ஆசியை முழுவதும் பெற்று, அவர்களின் மனம் குளிர , அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அளவுக்கு, ஒரு நல்ல நிலைமைக்கு நாம் சென்று அடைய , கன்னி ராசியில் சூரியன் நிற்பதால் ஏற்படும் இந்த பௌர்ணமி நன்னாள் , நமக்கு துணை நிற்கட்டும்..! 


இனி வர விருக்கும் ஒவ்வொரு நாளும் , புதுப் பொலிவை நமக்கு கொண்டு வர, அந்த இறையருள் என்றும் நம் துணை நிற்கட்டும் ..! 

நினைத்தாலே துயர் துடைக்கும், நம் அன்னை பத்திரகாளியின் அருள் நிழல் , நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தட்டும்!


மகத்தான , ஒரு ஆன்மீக பரவச அனுபவத்துக்கு தயாராகுவோம் !  


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் ! 

Read more: http://www.livingextra.com/2011/10/blog-post_11.html#ixzz1aaJ27Mun