Wednesday 28 September 2011

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!


உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!



சாயந்திரம் ஆச்சுனா, சரக்கு. இடையிலே, மொபைல் ல - எஸ் ஹனி , லவ்   யூ செல்லம் னு - ஒரு நாலு பேருக்கிட்ட பேச்சு. கட்டின பொண்டாட்டி பேசுறப்போ , மீட்டிங் முடிய போகுது கண்ணு. இதோ வந்துடறேன் .... 
இது தான் இன்னைக்கு மாடர்ன் யூத் பண்ணிக்கிட்டு இருக்கிற , ஒரே வேலை. நல்லா சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் , காசு பார்த்திட்டு - ஒரு   ரெண்டு , மூணு பொண்ணுங்க , அவன் பின்னாடி சுத்தும். காசுக்குத்தான்னு தெரியும் , இவருக்கும். இருந்தாலும், இவரும் அதை தொடர்வார். கட்டின பொண்டாட்டி தவிர, எல்லா பொண்ணுங்களுமே , எதோ ஒரு வகையிலே - இவரை இம்ப்ரெஸ் பண்ணுவாங்க.. ! இப்படியே வண்டி ஓடும்.      


சிட்டில பாதி இளைஞர்கள் இப்படித்தான். மீதி பேரு , இப்படி இருந்தா , நல்லா இருக்குமேன்னு நினைக்கிற இளைஞர்கள். 


தத்வமசி  னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும்


கெட்ட எண்ணங்கள் வராம இருக்க, நல்ல எண்ணங்கள் வளர்க்கணும். அதுக்கு முன்னே , நமக்கு நம்மை பத்தி நல்லா தெரியனும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை. இது தெளிவான கட்டுரை படிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க உங்களுக்குள் , கொஞ்சம் குட்டையை குழப்ப மட்டுமே. குழம்பிய பிறகு, மனது தெளிவடைய ஆரம்பித்த பிறகு, உங்களை நீங்கள் கவனியுங்கள். உங்களைவிட நல்லவர் யாருமே இல்லை... மேலே தொடரலாம்..!

"ஓ" போடு பாட்டு ஹிட் ஆன "ஜெமினி" படத்தில வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருக்கிறாரு.. ஆனா , அதை நம்மில் எத்தனை பேரு நோட் பண்ணிருப்போம்னு தெரியலை. .. தலை கீழா பொறக்கிறான்னு வர்ற பாட்டு.. .... வாய்ப்பு கிடைக்கும்போது , பொறுமையா கேட்டுப் பாருங்க... 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSEr8IXXKpoTkhtu4muqHkX679Gf5SY9CxUUotbYIF_ChUQ_Ifr
ஒரே ஒரு துளி யில் இருந்து உருவாவது இந்த உயிர். இத்தனைக்கும் , ஒரு துளி விந்துவில் இருப்பது , பல கோடி ஜீவ அணுக்கள். உங்களுக்கு முன்னே இருந்த ஒரே ஒரு அணு , முண்டிப் போயிருந்தா , இன்னைக்கு நீங்க இல்லை. உங்களுக்கு பதிலா , உங்க அண்ணாச்சி தான் , பிறந்து இருப்பாரு. அத்தனையும் தாண்டி , நீங்க , பிறக்கும்போதே , கோடி பேரை ஜெயிச்சு , இந்த பூமியைப் பார்க்க ஆசைப் பட்டு , வெற்றி வீரனா வந்து இருக்கீங்க...

பிறக்கும் முன்னாலே இருந்தே போராட்டம் தான் , ஆனா அதுலே நீங்க வெற்றி பெற்று சாம்பியனா வந்து இருக்கீங்க. போராட்டம் ஒன்னும் நமக்கு புதுசு இல்லை. வெற்றியும் நமக்கு புதுசு இல்லை. 
எப்பவுமே எடுத்த முயற்சி எல்லாம் தோத்துப் போகுதே, வாழ்க்கையிலே முன்னேறாம இப்படியே இருந்திடுவோமோனு, பயப்படாதீங்க... உங்களால கண்டிப்பா முடியும். உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்து காட்டுவீங்க.. அதுக்குத் தான்,  நீங்க வந்து இருக்கீங்க...

உங்களோட சக்தியை , நீங்க உணர்ந்து - நம்பிக்கையுடன், வாழ்க்கையில் தொடர்ந்து பயணியுங்கள்... வெற்றி நிச்சயம்... !


நமக்கு உலகத்திலே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்குது தெரியுமா? முதல்ல நமக்கு நம்ம யாருன்னு தெரியுமா? நம்ம உடலைப் பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரியுமா?

ஒரு சட்டை வாங்குறோம், பைக் வாங்குறோம்..... இதை எல்லாம் , ஒரு விலை கொடுத்து வாங்குறோம். சரிதானே ! அதன் பிறகு,  அது நம்ம பொருள்.

ஐயா, சரி ஐயா , உங்க உடம்புனு சொல்றீங்களே, அதுக்கு ஏதாவது விலை கொடுத்து வாங்கினீங்களா? இல்லை, நீங்க வாங்கலையே . அப்புறம் எப்படிம், என் உடம்பு னு உரிமை கொண்டாடுறீங்க?

சரி, இந்த உடம்பு எப்படி வந்துச்சு - உயிர் கொடுத்தவங்க ,  உங்க அப்பா , அம்மா ரெண்டு பேரும்தானே. உரிமை கொண்டாட வேண்டியவங்க அவங்க தானே.  நியாயமா , இந்த உடம்பு உழைச்சு ஓடாப் போக வேண்டியது அவங்களுக்குத் தானே. ஆனா , எத்தனை பேரு , அப்படி நினைக்கிறோம்?  எத்தனை தடவ பெற்றவங்களுக்கு கண்ணீர் வர வைச்சு இருக்கிறோம்? பெத்தவங்களை எவ்வளவு வேதனைப் பட வைக்கிறோம்? எத்தனை முதியோர் இல்லங்கள், அதில் எத்தனை பேரு ஆதரவு இல்லாம , கண்ணீரும் , கம்பலையுமா? உங்க உயிர் தங்கிக்கிட வாடகைக்கு வீடு கொடுத்த , வீட்டு உரிமையாளர்களுக்கு , உங்க கூட , ஒரே வீட்டில தங்கிக்கிட கொடுப்பினை இல்லை.   

வயசான அப்பா , அம்மா இருந்தா , உங்க கூட வைச்சுக்கிட முயற்சி பண்ணுங்க. அவங்க பண்ற எதுவும் உங்களுக்கு பிடிக்கலை, சரி, பரவா இல்லை - வாழ்க்கையிலே , எத்தனையோ விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, சகிச்சுக்கிட்டு போறோம். பெத்தவங்களை பார்த்துக்க முடியாதா? 

வேற ஒருத்தரோட உடமை , உங்க கிட்ட இருந்தா அதை எவ்வளவு பத்திரமா பாதுகாக்கணும்? திரும்ப கேட்டா , எந்த சேதாரம் இல்லாம கொடுக்கணும் இல்லை. நம்ம உடம்பு , நம்ம உடமை இல்லையே? அதை குறைந்த பட்சம் , பத்திரமா பார்த்துக்க வேண்டாமா? ஆனா, பண்ணுறோமா?

குடி, புகை , கறி , மீனு , மாமிசம்.. எவ்வளவு உள்ளே போகுது? பெண் சுகத்துக்கு ஏங்குகிற உடம்பு... இப்போதைக்கு உடம்பு தான் ஜெயிக்கிறது. மனசு , பாவம் ... என்ன பண்றதுனே தெரியாம மிரண்டு போய் இருக்குது. முதல் தப்பு பண்றபோது , மனசு கொஞ்சமாவது பக் பக்குன்னு அடிச்சிக்கும். ஒரு வார்னிங் தரும். ஆனா, அடுத்தடுத்து..? கம்முனு போயிடுது. நாமதான் இதை மனப் பக்குவம் (?) னு நெனைச்சு , நம்மளையே ஏமாத்திகிடுறோம். 
இப்படியே போனா, என்ன ஆகும்? சீக்கிரம் , உடம்பு தளர்ந்து , இளமையை நினைச்சு ஏங்கிக்கிட்டு.. அட ச்சே.ன்னு ஆகிடாது? உடம்பை பத்திரமா வைச்சுக்குவோம் சார்.. ! அந்த காலத்திலேயே , சர்வ சாதாரணமா , எண்பது வருஷம் , தொண்ணூறு வருஷம்னு இருந்து இருக்கிறாங்க? இப்போ பாருங்க.. !

உடம்புக்குள்ள , உயிர்னு ஒண்ணு , என்னென்னே தெரியாம , நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுது . உங்க உரிமை இல்லாத உடம்புக்குள்ள அது இருக்குது. ரெண்டும் சேர்ந்தது தான் நீங்க. நீ யார்னு முதல்லே தெரிஞ்சுக்கோனு சித்தர்கள் சொல்லுவது இதைத்தான். பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் உடல். ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம் இருந்துக்கிட்டே தான் இருக்கணும். அது கூடினாலும், குறைஞ்சாலும், உயிர் அந்த உடம்புலே தங்குறது இல்லை.

இப்போதைக்கு உலகத்திலே இருக்கிற ஜீவ ராசிகளிலே , கேட்க , சிந்திக்க, பேச ,  தெரிஞ்ச ஒரே இனம் நாம தான். ஆனா , நமக்கு நம்மை பற்றி தெரிஞ்சுக்க அவகாசம் இருந்தும், என்னென்னே தெரிஞ்சுக்கிடாம, நாமளும், மிருகத்தோட மிருகமா , வாழ்ந்து , ஒரு நாள் மடிஞ்சும் போறோம்.. நம்மளை பத்தி , நமக்கு இப்போ , புரியாம, அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுத்த பிறகுதான் புரியணுமா?  இப்போ இருந்தே , அதற்க்கான முயற்சியில் இறங்கலாமே?

நாம விடுற மூச்சுக் காற்றை , கவனிக்க ஆரம்பிச்சாலே போதும், நமக்கு கூடிய சீக்கிரம் , அதற்க்கான விடை கிடைக்க ஆரம்பிக்கும். மூச்சுப் பயிற்சி,
தியானம் - உங்களுக்கு இந்த பிறவியின் நோக்கம் என்ன என்பதை தெரிய வைக்க , நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி.

சப்தங்களை கேட்க தெரிஞ்ச மனிதன், தானும் சப்தம் எழுப்பி - பேசி - ஒரு விஷயத்தை அறிய முற்படுகிறான். இந்த பூமியே, ஒரு மெல்லிய சப்த அதிர்வில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அதிர்வை ஒத்து அது இருக்கிறதாக , நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான், நாமும் மந்திர ஜெபங்களின் மூலம் , இறைவனை அடைய முயற்ச்சிக்கிறோம். 

மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.


எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதற்கு அப்படி சொல்லுறாங்க? 
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQD7YWqo6Fgqq51BqofepCGTBazGdJR_QxxBAmL_ddkIvBvjk3NWg

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்

மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRh5syiyl269D_F3LvwhDXmGDKyizT6G2QrAaabV7EG9J_HbBdGgw
வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

இந்த மாதிரி, சில சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கிட ஆரம்பிப்போம்
நம் உடம்பில் சக்தியை எப்படி பெருக்குவது என்று பார்ப்போம்.


மனசுன்னு ஒன்னு இருக்கிறதை உணர முடியுதா உங்களால? அறிவியலுக்கு அது தெரியாது. கண்ணுக்கு தெரியாத ஒன்றை எப்படி ஒத்துக்க முடியும்? நல்லா உடம்பை பார்த்துக்கிடுறோம், நல்லா ஆரோக்கியமா சாப்பிடுறோம்.. உடம்பு சக்தியோட இருக்கு. திடீர்னு ஒரு கெட்ட நியூஸ். ஹா... அதிர்ச்சி வரும் அளவுக்கு. என்ன ஆகும்..? உடம்பு என்னதான் சக்தியோட இருந்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. 


என்ன வேலை செய்திட முடியும்? அதுக்கு அப்புறம், ஒழுங்கா சாப்பிடாம, இன்னும் உடம்பு வீக் ஆகும். இல்லையா? இந்த உடம்பு , மனசு / ஆத்மா ரெண்டும் சேர்ந்தாதான் , அது நாம்.


ரெண்டுல ஒன்னு இல்லைனாலும், பயன் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம்...! நாம ஒன்னும் , பெரிய பெரிய அரசியல்வாதிகள் வீட்டில் பிறந்துவிட வில்லை. நாம உழைச்சாத்தான் , நமக்கு சாப்பாடு. நிறைய சம்பாதிங்க.! ஒரு பத்து குடும்பத்துக்காவது , நல்லா சம்பாதிக்கிற வாய்ப்பு, வழிமுறை சொல்லிக் கொடுங்க.. ! 


நம்ம காலம் முடிஞ்சாலும், நம்மளை வாழ்த்தி அனுப்ப - ஒரு பத்து பேராவது இருக்கட்டும். நமக்கு பிடிச்ச விஷயங்கள்லே , நம்ம மூளையை எப்படி பயன்படுத்துறோமோ, அதைவிட ரெண்டு மடங்கு - பணம் சம்பாதிக்கிறதுலே காட்டுங்க.  

வெறுமனே பெண் சுகம், குடி,  போதை வஸ்து என்று அனுபவிப்பதிலேயோ  , அல்லது அதையே நினைத்துக்கொண்டு  இருந்தோ  - நமக்கு கிடைத்துள்ள , இந்த மனித வாழ்க்கை என்னும் , அருமையான சந்தர்ப்பத்தை - இழந்து விட வேண்டாம். இதுவரை எப்படி இருந்தாலும் பரவா இல்லை, இனிமேலாவது சுதாரித்து எழுங்கள்..! 



உடலுக்கு தேகப் பயிற்சி , மனதுக்கு இறை பக்தி, வழிபாடு - இரண்டுக்கும் அடிப்படை - மூச்சுப் பயிற்சி. உங்களை முதலில் , அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அதன் பிறகு - வானம் நிச்சயம் உங்கள் வசப்படும்!
  
நம் வாழ்க்கையின் வெற்றி , தோல்வி - நம் கையில் தான் இருக்கிறது. 


வாழ்க வளமுடன்!  


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_26.html#ixzz1ZGJORMBm

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..!


சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..!

அன்பே சிவம் படத்துல கமல் காரெக்டர் ஞாபகம் இருக்குதா? 


"DON'T WORRY MY CHILD . WHATEVER HAPPENS LIFE MUST MOVE ON  " - பொசுக்கு பொசுக்குனு சின்ன சின்ன ஏமாற்றம் தாங்காம , நொந்து போகாதீங்க..!

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQhp3Ek_83KYG5wHCo8-h2u4N7_5_NEYyrdLofxZco_nX5gdc1whg


அடுத்த வினாடி என்ன நடக்கும்னு , யாருக்குமே தெரியாது. இன்னைக்கு ஒருத்தருக்கு வந்த கஷ்டம் , நாளைக்கு எனக்கும் வரலாம். இன்னைக்கு உங்ககிட்ட இருக்கிற சந்தோசம், நாளைக்கு உங்கள் பக்கத்து வீட்டுக் காரருக்கும் வரலாம். நாம யாருக்கும் கெடுதல் பண்ணாம இருந்த மட்டும் போதாது. கண்ணு முன்னாலே கஷ்டப்படுறவங்களுக்கு , நம்மாலே முடிஞ்ச நல்லது பண்ணனும்..! 


மிருகங்களுக்கு கூட அந்த இரக்க குணம் இருக்கு...! மனுஷனுக்கு ? ரொம்ப வசதியா இயற்கை நமக்கு இயல்பா கொடுத்த குணத்தை, ஈவிரக்கமே இல்லாமே நாம தொலைச்சிட்டோம்..! தொலைச்சதே அந்த இரக்கப்படும் குணத்தைதான்..! 

ரோட்லே அடிபட்டுக் கிடந்தா கூட,  எனக்கு என்னனு போற ஆளுங்க எத்தனை பேரு..? ஐயா விடுங்க, அது கூட பரவா இல்லை, Highways ஆக்சிடென்ட்ல , உசிருக்கு போராடுறவங்களுக்கு உதவி பண்ணாம, அவங்க கிட்ட இருக்கிற நகையை உருவுற அளவுக்கு , நாம மனிதத்தை தொலைத்து விட்டோம்..! 


"தம்பி, என்ன வேணும்னாலும் எடுத்துக்கோ, ஆனா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி , பக்கத்துல ஆஸ்பத்திரில மட்டும் சேர்த்திருப்பா"னு அவர் கெஞ்ச... இவன் என்ன நினைச்சானோ , பிழைச்சிட்டா அசிங்கம்னு நெனைச்சானோ தெரியலை..   நகையை மட்டும் பிடுங்கிட்டு ஓடிடறான்....! 


நமக்கு என்ன..? அசிங்கபடாம இருந்தா போதும், என்ன வேணும்னாலும் தப்பு செய்யலாம்..!


த்சோ. த்சோ.. னு புலம்பாதீங்க.. நமக்கும் கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு பணக்கஷ்டம் வந்தா, நாமளும் அப்படித்தான் இருப்போம்.. சொல்ல வர்றது இது தான்.

விபத்து நம்மில் யாருக்கும் வரக் கூடாது. கடவுள் ஆசீர்வாதத்தால் , நாம யாருக்கும் அந்த மோசமான வேளை  வர வேண்டாம். அப்படி ஒரு வேளை வந்தா - நேரத்தில உதவி கிடைக்கிற வகையில், நம்ம தர்மம் காப்பாத்தணும். 

ஐயா , ஒருவேளை நம்ம கண் முன்னாலே விபத்து நடந்து , உயிருக்கு  துடிக்கிற ஜீவன்கள் இருந்தா ,மன சாட்சியே இல்லாமே அவங்க போட்டு இருக்கிற நகைகளை அள்ளிக்கிடற அளவுக்கு, ஒரு ஈனத்தனமான நிலைமை வராத அளவுக்கு அந்த ஆண்டவன் , நமக்கு அருள் புரியணும்..!    

கஷ்டம் வந்தாதான் கடவுளுன்னு இல்லை. நல்ல விதமா இருக்கிறப்போவே, கடவுளை கும்பிடுங்க. முடியாதவங்களுக்கு உதவி பண்ணுங்க. பண உதவி தான்னு இல்லை. ஏழைப் பசங்களுக்கு , படிக்க சொல்லிக் கொடுத்தாக் கூட போதும். நாலு ஏழை பசங்களுக்கு , கல்விக்கடன் வாங்குவது சம்பந்தமா , உங்களுக்கு தெரிஞ்ச தகவலை சொன்னாக் கூட போதும்.  அதுக்கெல்லாம் நேரம் எங்கே சார் இருக்குனு கேட்காதீங்க..!  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.... !

இந்த மாதிரி சேவைகளால , நீங்க கோடீஸ்வரன் ஆகாம போகலாம்.. ஆனா, உங்க வம்சமே ,சந்ததியே.. ஓஹோ னு இருக்கும். உங்களோட பாவக் கணக்கு குறைஞ்சு, உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். 

எத்தனை பணக்காரங்க நிம்மதியா இருக்கிறாங்க? இந்த மாதிரி சின்ன சின்ன சேவை பண்ணிக்கிட்டு, உங்களோட அன்றாட கடமைகளையும் செஞ்சுக்கிட்டு வாங்க.. ! உங்களைவிட நிம்மதியா , இந்த உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டாங்க...! பணம் சம்பாதிக்க வேண்டாம் னு சொல்லலை.. வெறியோட சம்பாதிங்க.. ஆனா, நல்ல மனுஷனாவும் இருங்க.... அது ரொம்ப முக்கியம்.. !  

சொல்வது எளிது , செய்வது அரிது என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! சந்தோசம் வந்தா , ஊரையே கூட்டி கூப்பாடு போடுறதும், துக்கம் வந்தா , மூலைலே சுருண்டு கிடக்கிறதும், நம்ம மனித இனத்துக்கே உரிய இயல்பான குணம். ஆனா, இதெல்லாம் கூடாதுன்னு சொல்றாங்க. 

அதென்னப்பா.. எதை எடுத்தாலும் , அப்படி செய்யக் கூடாது, அது எல்லாம் தப்புனே சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க......

நீங்க சந்தோசமா இருக்கிறீங்களா..! உலகத்துலே உள்ள மத்த எல்லாமே தப்பு.  இல்லையா .... அடி மேல் அடி , அதனாலே கவலைலே இருக்கிறீங்களா? உலகம் ரொம்ப சரி, உங்க கிட்டே தான் எல்லா தப்பும் இருக்கு. அப்போ, நீங்க பண்றது தப்புன்னு தானே சொல்லணும்.. !  

கீழே உள்ள கட்டுரை , எப்போதோ நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இருந்தது. அருமையான கட்டுரை. வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், எப்போவாவது இந்த கட்டுரையை நினைச்சுப் பார்ப்பீங்க.. ! வாழ்த்துக்கள்..!
==========================================
வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள்...   
எல்லாவற்றையும் நாம் ஒன்று போல் பார்க்க வேண்டும்... துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சரி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. துன்பம் வரும்போது அழுகை வராமல் இருந்தால் சரிதான் என்பதல்லவா நமது நிலைமை.

அது எப்படி துன்பம் வரும்போது அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கவோ, இன்பம் வரும்போது வானத்தை தொட்டு வருவது போல் பறப்பதோ இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.

அதற்கு ஒரு மந்திரம் உண்டு. மூன்று வார்த்தை மந்திரம் தான் அது. இதனை என் வாழ்க்கையில் நான் பல முறை கடைபிடித்துள்ளேன். பல சமயங்களில் இடி விழுந்தது போன்ற பிரச்சினைகளில் இந்த மூன்று வார்த்தையை உச்சரித்த வண்ணம் இருப்பேன். அதுவே எனக்கு பலம் என்றும் எண்ணியுள்ளேன்.

அதை உங்களுக்கும் கூறுகிறேன். முயற்சித்துப் பாருங்கள். இதற்கு ஒரு கதை உண்டு. (பல ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இன்று ஒரு தகவலில் கேட்டது)

ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.

துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.

மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பல காலங்கள் கழிந்தன. அப்போது,

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே! 


இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டி‌ரு‌ந்த வேலை‌யி‌ல் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''

இ‌ப்படியான ஒரு வேதனை‌த் தா‌‌ன் அ‌ந்த ம‌ன்னனு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டது. அ‌ப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.

அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன....

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.

ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_4724.html#ixzz1ZGHtMwEr